Categories
உலக செய்திகள்

தமிழக மீனவர்கள் விடுதலை…. உத்தரவிட்ட இலங்கை நீதிமன்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

இலங்கை சிறையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த 55 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், அந்த மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அதன்படி, புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 55 பேரும் நிபந்தனைகளுடன் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வருடம், டிசம்பர் மாதம் 18 மற்றும் 20-ஆம் தேதிகளில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாட்டின் முதல்வர் உட்பட பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே, நீதிமன்றம் மீனவர்களை விடுவிக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Categories

Tech |