சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியுள்ளது, இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணியாதோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றை குறைக்க பொதுமக்கள் அனைவரும் முகக்கவசத்தை வாய், மூக்கை மூடியபடி முழுவதுமாக அணியவேண்டும். சரியாக முகக்கவசம் அணியாவிட்டாலும் அபராதம் செலுத்த நேரிடும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories
வாய், மூக்கு எல்லாம் மறைங்க…. இல்ல கட்டுங்க ரூ.500…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!
