Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மகளின் வளைகாப்பை நிறுத்த…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காதல் திருமணம் செய்த மகளின் வளைகாப்பை நிறுத்த டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு உணவகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது மூத்த மகளான சக்திபாரதியும் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான அஜித்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த முருகன் தனது மகளை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத சக்திபாரதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித்குமாரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் முருகன் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் சக்திபாரதிக்கு கணவர் வீட்டார் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக அங்குள்ள ஒரு மண்டபத்தில் ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்கிடையே முருகன் இந்த வளைகாப்பை நிறுத்த வேண்டும் என்பதற்காக மண்டபத்தின் அருகில் உள்ள தொழுகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து எட்டயபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |