கொரோனாவின் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறியிருக்கிறது. இந்த வைரஸ் அரசுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், தொற்றால் நன்மையும் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதாவது ஒமைக்ரான் அலையால் கொரோனாவை முற்றிலும் முடிவுக்கு வரும் என்று பிரபல மருத்துவ நிபுணரான டாக்டர் நரேஷ் புரோகித் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான அவர் இது தொடர்பாக கூறியபோது, “ஸ்பானிஷ் காய்ச்சலைப் போலவே கொரோனாவிலும் முதல் அலை லேசாகவும்,2வது அலை அதிகமாகவும் இருந்தது. இதில் கொரோனா 2வது அலைக்கு பிறகு ஸ்பானிஷ் காய்ச்சல் சாதாரண காய்ச்சலாகவே மாறி விட்டது.
அதேபோன்று கொரோனாவின் 3வது அலையும், 2வது அலையை விட லேசாகவும், அதிக பாதிப்பு இல்லாமலும் மாறியிருக்கிறது. ஆகவே கொரோனா 4வது அலையானது இந்தியாவில் இருக்க வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் தற்போதைய சான்றுகளை பார்க்கும்போது இந்த தொற்று நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு மாறுபாடாகவே ஒமைக்ரான் அலை மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.