ஹைதராபாத்தில் வெங்கடேஷ் ராவத் மற்றும் சுவர்ணா ரமாவத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று இருந்துள்ளது. கொரோனா காரணமாக வெங்கடேஷ் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். அதனால் குடும்பத்தில் பண பிரச்சனை எழுந்துள்ளது. அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் ஆவேசமடைந்த வெங்கடேஷ் வீட்டிலிருந்து பாட்டிலை அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
அப்போது மனவேதனையில் இருந்த மனைவி குழந்தையுடன் சேர்ந்து சானிடைசர் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் சுவர்ணா 70% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.