Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கெல்லாம் இப்படி செய்யலாமா…. லாரி டிரைவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அடுத்துள்ள கூத்தம்பூண்டி அண்ணாநகரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சுப்பிரமணி உடல்நிலை குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ராஜேஷ் உடனடியாக சுப்பிரமணியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சுப்பிரமணியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நேற்று நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |