Categories
உலக செய்திகள்

“அண்டை நாடுகளை அலற விடும் வடகொரியா!”…. அடுத்த பிளான் இதுதான்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

வடகொரியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கிட்டத்தட்ட நான்கு முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒலியை விட 5 மடங்கு வேகமாக பாய்ந்து செல்லும் திறனுடைய ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதித்து வருகிறது. இதனால் அண்டை நாடுகள் பீதியில் உள்ளனர்.

இதற்கிடையே வடகொரியாவின் இந்த நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா அந்நாட்டின் அதிகாரிகள் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில் வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதிப்பது குறித்து பரிசீலிக்க முடிவெடுத்துள்ளது. இதனால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளது.

Categories

Tech |