மகன் தந்தையை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கச்சைகட்டி பகுதியில் 43 வயதுடைய விவசாயி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 21 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயியின் மனைவி தனது 2 மகன்களுடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாய் மற்றும் மகன்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அப்போது விவசாயிக்கும், அவரது 2-வது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த சிறுவன் தனது தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.