நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள், கல்வி நிறுவங்களுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலில் இருக்கிறது. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
Categories
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில்…. மத்திய சுகாதாரத் துறை அதிர்ச்சி தகவல்….!!!!!
