லாரிகள் மோதிக்கொண்டதில் காண்ணாடி பாட்டில்கள் அனைத்தும் சாலையில் சிதறியதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைத்துள்ளது.
ஆந்திராவில் இருந்து கோவையில் செயல்பட்டு வரும் மதுபான ஆலைக்கு கண்ணாடி பாட்டில்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை செங்கோட்டையன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் அந்த லாரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது.
அப்போது லாரிக்கு பின்னால் அடுப்புகரி பாரம் ஏற்றி வந்துகொண்டிருந்த மற்றொரு லாரி எதிர்பாரதவிபதாக லாரியின் பின்புறம் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் லாரி டிரைவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதனையடுத்து கோவை மதுபான அலைக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த அனைத்து கண்ணாடி பாட்டில்களும் சாலையில் விழுத்து சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.
இதனையரித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குமாரபாளையம் காவல்துறையினர் டிரைவர்களின் உதவியுடன் சாலையில் சிதறிக் கிடந்த கண்ணாடியை பாட்டில்களை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.