Categories
இந்திய சினிமா சினிமா

புஷ்பா இயக்குனரின் அடுத்த படம்…. இணையும் முன்னணி தமிழ் நடிகர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர் புஷ்பா பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

இதைத்தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க களமிறங்கியிருக்கும் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அடுத்ததாக எந்த கதாநாயகன் நடிக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதன்படி இயக்குனர் சுகுமார் பிரபல நடிகர் தனுஷை வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்க உள்ளார் என்றும் தகவல் கசிந்துள்ளது. இவர்கள் இருவரும் இணையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிடுவார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Categories

Tech |