Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென நடந்த வாக்குவாதம்…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. தொழிலாளி கைது….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள உலகநடை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வசந்தி தன் தந்தை ஊரான செங்கப்படைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்துள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் திடீரென வசந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வசந்தியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வசந்தி கமுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி ஞானசேகரனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |