Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆழமான பகுதிக்கு சென்று…. உயிரை விட்ட ஆட்டோ டிரைவர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கால்வாயில் குளிக்க சென்ற ஆட்டோ டிரைவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியில் இருளப்பன் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள குரும்பபட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இருளப்பன் அப்பகுதியிலுள்ள 58-ம் கால்வாய்க்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இருளப்பன் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக ஆண்டிபட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கால்வாயில் இறங்கி இருளப்பனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சுமார் 3 மணி நேரம் போராடி பின்னர் கால்வாயில் கிடந்த இருளப்பன் உடலை மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |