மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வ.உ.சி. நகரில் ஜெயப்பிரகாஷ் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு சந்தனமாலா (28) என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தனமாலா குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜெயப்பிரகாஷ் திடீரென வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற கேணிக்கரை காவல் துறையினர் ஜெயப்பிரகாஷின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.