Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினையில்  ஆண் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாப்பாகுடி கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் ராமனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராமன் தனது வீட்டில்  தூக்கிட்டு  தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் ராமனின் தாயார் அழகி என்பவர் தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |