தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 3-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட்கோலி 79 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட் கைப்பற்றினர். இதன்பிறகு அனைத்து விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது.இதில் இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் 13 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் விராட் கோலி 21 ரன்னில் வெளியேற அடுத்து களமிறங்கிய அஷ்வின் ஷர்துல் தாகூர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 100 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இறுதியாக 67.3 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.இதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 212 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.