பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கேரளா இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் தீரஜ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து மாணவர் சங்க நிர்வாகிகளை புதுச்சேரியில் பல்கலைகழகத்தில் நுழையத் தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.