‘என்னை அறிந்தால்’ படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிய ஹிட் அடித்துள்ளது.
அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”என்னை அறிந்தால்”. இந்த திரைப்படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதலில் இந்த படத்தில் நடிக்க சமந்தா ஒப்புக் கொண்டதாகவும் பின்னர் இந்த படத்தில் நடிக்க அவர் நோ சொல்லி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் பிறகு இந்த கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்ததாக கூறப்படுகிறது.