Categories
உலக செய்திகள்

“பராகுவே நாட்டில் பயங்கரம்!”…. பற்றி எரியும் காட்டுத்தீ…. 2,000 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்….!!

பராகுவே நாட்டின் காட்டுப் பகுதியில் அதிவேகத்தில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

பராகுவே நாட்டின் தலைநகரமான, Asuncion-ன் தெற்கு பகுதியில் இருக்கும் Villeta என்ற காட்டுப்பகுதியில் பயங்கரமாக தீ பரவி வருகிறது. சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி,  தீயில் கருகி விட்டது.

எனவே, தீயணைப்புபடை வீரர்கள், தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக, 40 தீயணைப்பு படை வீரர்கள், 8 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். தீ பரவக்கூடிய 221 இடங்களை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |