Categories
சினிமா

சிவாஜிக்கு மரியாதை கொடுக்காத பிரபல நடிகை….!! அவ்ளோ திமிரா…??

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் சில்க் ஸ்மிதா. இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இத்தனைக்கும் சில்க்ஸ்மிதா மெயின் ஹீரோயின் கூட கிடையாது. அனைத்து ரசிகர்களையும் தன் அழகால் கட்டிப்போட்டவர் சில்க் ஸ்மிதா. படத்தின் கதை எவ்வளவு மோசமாக இருந்தாலும் சில்க் ஸ்மிதா நடனமாடிய பாடல் ஒருபோதும் தோல்வி அடைந்ததில்லை. சில்க் ஸ்மிதா யாருக்கும் பயப்பட மாட்டார் மிகவும் தைரியமான ஒரு நடிகை என அவருடைய சமகால சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில்தான் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. நடிகை சில்க் லாரி டிரைவர் ராஜாகண்ணு என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் நடிகர் சிவாஜி கணேசன் வரும்போது எழுந்து நின்று மரியாதை கொடுப்பார்களாம். ஆனால் சில்க் ஸ்மிதா மட்டும் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பாராம். அவ்வளவு பெரிய நடிகர் வரும் போது மரியாதை இல்லாமல் இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்களே என பலர் கேட்டார்களாம்.

அதற்கு சில்க் ஸ்மிதா அவர் அந்த படத்தின் பாட்டிற்கு நடனம் ஆடுவதற்காக குட்டை பாவாடை அணிந்து வந்துள்ளதாகவும். மேலும் அவர் எழுந்து நின்றால் அது அனைவருக்கும் அசௌகரியத்தை கொடுக்கும். இதனால்தான் அவர் அன்று எழுந்து நிற்கவில்லை என்று அதன்பின் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். மற்ற எந்த ஹீரோயினுக்கும் இந்த அளவிற்கு தைரியம் கிடையாது. அந்த வகையில் நிச்சயம் சில்க்கை பாராட்டலாம். ஆனால் சிலர் அவர் மிகவும் திமிர் பிடித்தவர் என்றெல்லாம் விமர்சனம் செய்துள்ளனர். இருப்பினும் சில்க் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ள மாட்டாராம்.

Categories

Tech |