Categories
மாநில செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க?…. மதுரையை கலக்கும் மஞ்சப்பை பரோட்டா…. வைரல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு சமீபத்தில் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சப்பை இயக்கம் ஒன்றை தொடங்கியது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் மஞ்சப்பை கலாச்சாரம் இப்போது துளிர்விட தொடங்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், கோதுமை மாவில் மஞ்சப்பை வடிவத்தில் பரோட்டா தயாரிக்கப்படுகிறது. அதன் பிறகு இதில் சாஸ் மூலம் மீண்டும் மஞ்சப்பை என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

அந்த ஹோட்டலில் மஞ்சப்பை பரோட்டா தலா 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செவ்வக வடிவில் காட்சியளிக்கும் மஞ்சப்பை பரோட்டாவுக்கு பொதுமக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. ஹோட்டலில் பார்சல் வாங்க வருபவர்களுக்கு பரோட்டாவுடன் இலவசமாக மஞ்சப்பை வழங்கப்படுகிறது. இது தவிர வாடிக்கையாளர் முகக் கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மதுரையை கலக்கி வரும் மஞ்சப்பை பரோட்டாக்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதைக்கேட்டு முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்ததாகவும் தகவல் பரவி வருகிறது.

Categories

Tech |