Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… 4 நாட்களாக தவிக்கும் பயணிகள்…. ரத்து செய்யப்பட்ட விமானங்கள்….!!

மெக்சிகோ நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நான்கு தினங்களாக விமான நிலையத்தில் மக்கள் தவித்து வருகிறார்கள்.

“ஏரோ மெக்சிகோ” விமான நிறுவனத்தின் பணியாளர்கள் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அந்நிறுவனத்தினுடைய அதிகமான விமானங்களின் சேவை உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

இதனால், விமான டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் விமான நிலையத்திலேயே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண், தகுந்த நேரத்தில் அமெரிக்கா செல்லாவிட்டால் அங்கு தன் பணி பறிபோய்விடும் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார். மேலும், விமான நிலையத்தில் தங்களுக்கு சரியாக சாப்பாடு கூட ஏற்பாடு செய்து தரப்படவில்லை என்று பல பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Categories

Tech |