கிரெடிட் கார்டு என்பது ஒரு முன்- அமைக்கப்பட்ட கடன் வரம்புடன் வங்கிகளால் வழங்கப்படும் நிதி கருவியாகும். இது ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவுகிறது. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் கிரெடிட் கார்டு கட்டணங்களை உயர்த்தி ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி அமலுக்கு வரவிருக்கிறது.
அதன்படி எல்லா கிரெடிட் கார்டுகளுக்கும் ரொக்கப்பணம் பரிவர்த்தனைகளுக்கு 2.50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச கட்டணம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் செக் ரிட்டர்ன், ஆட்டோ டெபிட் ஆகியவற்றுக்கு மொத்த நிலுவைத் தொகையில் 2 சதவிகிதம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இதற்கும் குறைந்த பட்ச கட்டணம் 500 ரூபாய் ஆகும். ICICI Emerald Card தவிர மற்ற எல்லா கிரெடிட் கார்டுகளுக்கும் தாமதமாக நிலுவைத்தொகை செலுத்துவதற்கான கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
100 ரூபாய்க்கு குறைவான நிலுவை தொகைக்கு எந்த கட்டணமும் கிடையாது. மேலும் 101 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான நிலுவைத் தொகைக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 501 முதல் 5000 ரூபாய் நிலுவைத் தொகைக்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 5001 முதல் 10,000 ரூபாய் வரையிலான நிலுவை தொகைக்கு 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 10001 முதல் 25,000 ரூபாய் வரையிலான நிலுவைத் தொகைக்கு 900 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 25,001 முதல் 50,000 ரூபாய் வரையிலான நிலுவை தொகைக்கு 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட நிலுவை தொகைக்கு 1,200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.