தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்கு பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன் மற்றும் ரோந்து வாகனங்கள் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
Categories
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு…. போலீசார் கடும் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
