கேரளாவில் கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீசப்பட்ட பெண்ணின் உடல் மறுபிரேதப் பரிசோதனைச் செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட வித்யா என்ற கேரள பெண்ணின் சடலத்திற்கு உரிமைக்கோரி எவரும் வராத காரணத்தால் பிரேத பரிசோதனை செய்து வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்டது. இதைதொடர்ந்து கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த வித்யாவின் கணவர் பிரேம்குமார் மற்றும் அவருடன் நெருக்கமாக பழகி வந்த பள்ளித்தோழி சுனிதா பேபியை கேரள மாநில போலீசார் கைது செய்தனர்.
தாங்கள் நெருக்கமாக இருப்பதற்கு பிரச்சனையாக இருந்த வித்யாவை கழுத்தை இறுக்கி கொலை செய்த இருவரும் முகத்தை சிதைத்து வள்ளியூரில் உடலை வீசிவிட்டு சென்றனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் ராதாபுரம் தாசில்தார் செல்வன் முன்னிலையில் கேரள மருத்துவக்குழுவினர் மற்றும் போலீசார் சேர்ந்து வித்யாவின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்தனர்.