நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் ஆடிட்டரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் தனது மகளை வேலையில் சேர்த்து விடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குமார் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.