தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்ய இருக்கின்றனர். கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2018ஆம் வருடம் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யும் மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்ய இருக்கிறார். குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள கூட்டுறவு சங்கத்தின் 20,000-க்கும் மேற்பட்டோரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய வாய்ப்பு இருக்கிறது.