Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகளில் கட்டுப்பாடு…. இதற்கு அனுமதி இல்லை…..!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள காரணத்தால், நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து இன்று முதல் மெட்ரோ, மின்சார ரயில் மற்றும் பேருந்துகளில் 50 சதவீதம் பயணிகளுக்கு மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், மருத்துவம் சார்ந்த பணிகள், பால், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாளை மறுநாள் வரை வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |