Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு …!!

சாலையோரத்தில் பாதி எரிந்த  நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது .

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நெடுஞ்சாலை ஓரம் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமா நகர் அருகே ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கால் முதல் இடுப்பு வரை எரிந்து நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு அவர் யாராலும் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனர்

Categories

Tech |