மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொங்காளியூர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த வள்ளியம்மாள் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மாள் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே வள்ளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.