Categories
தேசிய செய்திகள்

ALERT: 3 மாதங்களுக்கு விமான சேவை ரத்து…. எந்த வழித்தடங்களில் தெரியுமா?…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது விமான போக்குவரத்து துறையும் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பல வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்திலிருந்து புதுதில்லி மற்றும் மும்பைக்கான விமானங்களின் எண்ணிக்கையை இண்டிகோ நிறுவனம் குறைத்துள்ளது.

அடுத்த 3 மாதங்களுக்கு இந்த வழித்தடங்களில் தினசரி விமான சேவையை குறைக்க உள்ளதால், விமான பயணிகள் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இதனால் விமான கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு மம்தா பானர்ஜி அரசு மேற்குவங்க மாநிலத்திலிருந்து புது தில்லி மற்றும் மும்பைக்கு வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக இண்டிகோ அளித்த தகவலின்படி, மேற்குவங்கத்தில் உள்ள கொல்கத்தா, துர்காபூர் மற்றும் பாக்டோக்ராவிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய 2 நாட்கள் மட்டுமே விமான சேவை மேற்கொள்ளப்படும். இண்டிகோ தனது விமான சேவைகளை அடுத்த 3 மாதங்களுக்கு குறைத்துள்ளது. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன், விமான கட்டணமும் உயரலாம்.

மேலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தகவல் தெரிவித்து வருவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அவர்களின் விமானம் ரத்து செய்யப்பட்டிருந்தால், அவர்களின் இணையதளத்திற்கு சென்று பணத்தை திரும்ப பெறலாம் அல்லது தங்களின் விருப்பப்படி வேறு விமானத்தை தேர்வு செய்யலாம். இதற்காக பயணிகள் www.goindico.in இன்டிகோ இணையதளத்திற்கு சென்று பிளான் பி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Categories

Tech |