நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் உபியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அதிகரிக்கபடுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை இருந்த ஊரடங்கு இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6 முதல் 14-ம் தேதி வரை 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.