Categories
தேசிய செய்திகள்

பிறப்புறுப்பில் 30க்கும் மேற்பட்ட காயங்கள்…. இறந்த பின்னரும் விடாமல் வேட்டையாடிய காம கொடூரர்கள்…!!

ராஜஸ்தானில் மாடு மேய்க்கச் சென்ற மலைவாழ் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பண்டி பகுதியைச் சேர்ந்த மலைவாழ் சிறுமி ஒருவர் தனது தோழிகளுடன் மாடு மேய்க்கச் சென்று உள்ளார். அப்போது அவர் திடீரென மாயமாகி உள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் அவளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் அருகில் இருந்த ஒரு பகுதியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து அந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக பண்டி மாவட்ட எஸ்.ஐ ஜெய் யாதவ் கூறியதாவது, 3 மர்ம நபர்கள் சேர்ந்து சிறுமியை கட்டிவைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், அப்போது அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற சிறுமியை பிறப்புறுப்பில் 30க்கும் மேற்பட்ட முறை தாக்கியதாகவும் இதனால் சிறுமி வலி தாங்க முடியாமல் இறந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இறந்த சிறுமியின் உடல் என்று கூட பார்க்காமல் அதற்குப் பின்னரும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர் எனவும், அவர் கூறினார். தொடர்ந்து இந்த சிறுமியை இவ்வாறு செய்தவர்களை விரைவில் காவல்துறை கைது செய்து தக்க தண்டனை வாங்கிக் கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |