Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. 4,500 ரூபாய் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி டிஏ மற்றும் டிஆர் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை கோர முடியாமல் இருந்த ஊழியர்கள், தற்போது இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொரு மாதமும் 2,250 ரூபாய் செலுத்த உரிமை கோர முடியும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு பணியாளர்கள் CEA உரிமை கோர முடியவில்லை. தற்போது கல்வி தொடர்பாக பணியாளர்கள் மற்றும் பயிற்சி அலுவலகம் ஜூலை மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,CEA உரிமை கோரல்கள் சுய அறிக்கை அல்லது முடிவு அறிக்கை அட்டை, எஸ்எம்எஸ், கட்டணம் செலுத்திய மின்னஞ்சலின் பிரிண்ட் அவுட் மூலமாகவும் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இந்த வசதி மார்ச் 2020 முதல் மார்ச் 2021-ஆம் ஆண்டுடன் முடிவடையும். கல்வி ஆண்டுகளில் மட்டுமே கிடைக்கும் என்பது முக்கியமானது. தற்போது மத்திய அரசு பணியாளர்களுக்கு ஒரு குழந்தைக்கு ஒவ்வொரு மாதமும் 2,250 என்ற விதத்தில் 2 குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற உரிமை உண்டு. இதில் 2-வது குழந்தை இரட்டை குழந்தையாக இருந்தால் இந்த உதவித்தொகை முதல் மற்றும் 2-வது குழந்தையின் கல்விக்காக வழங்கப்படும். இதன்மூலம் ஊழியரின் வருமானம் 4,500 ரூபாய் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசு ஊழியர்கள் பள்ளி சான்றிதழ்களையும், கோரிக்கை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் குழந்தையின் அறிக்கை அட்டை, சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது போன்றவையும் கோரிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Categories

Tech |