மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் சித்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் இளையரனேந்தல் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் சித்தனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சித்தனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேன் டிரைவரான சௌந்தர்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.