Categories
தேசிய செய்திகள்

சாவுக்கு கூட வராத மகன்கள்…. 4 கி.மீ தாயின் உடலை சுமந்த மகள்கள்…. பெரும் துயர சம்பவம்….!!!!

ஒடிசா மாநிலத்தில் பூரி நகரில் உள்ள மங்களகாட் பகுதியில் ஜதி நாயக் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இவரது மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவரது மகன்களும் அவர்களது குடும்பத்தினர் தனியாக வசித்து வருகின்றனர். மேலும் கடந்த 10 வருடங்களாக மூதாட்டியை அவரது மகன்கள் புறக்கணித்து வந்துள்ளனர். கணவர் இறந்த பிறகு மூதாட்டி சிறு வியாபாரம் செய்து தன்னுடைய உணவுக்கான செலவுகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஜதி நாயக் மூதாட்டி காலமானார். இவர் இறந்ததையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரது 2 மகன்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தாயின் இறுதிச் சடங்கை செய்ய வரவில்லை. இதனால் கலாச்சார தடைகளை உடைத்து மூதாட்டியின் மகள்கள் 4 பேரும் தங்கள் தாயை தகனம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து இறுதி சடங்கு செய்வதற்காக சுடுகாடு வரை 4 கி.மீ. தூரம் தங்கள் தாயின் உடலை சுமந்து சென்ற 4 மகளும்  இறுதிச் சடங்கை செய்து முடித்துள்ளனர்.

Categories

Tech |