Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

துக்க நிகழ்சிக்கு சென்றவருக்கு…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள விளந்தை கிராமத்தில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வீரமணி உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் ஜெயந்தி என்பவருடன் சென்னையில் இருந்து விளந்தைக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் 3:30 மணி அளவில் விக்ரவாண்டி அடுத்த வீடூர் அணை பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் பழுதடைந்து நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்தில் வீரமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து படுகாயமடைந்த ஜெயந்தியை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற விக்ரவாண்டி காவல்துறையினர் வீரமணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |