Categories
அரசியல்

செஞ்ச தப்புக்கு தண்டனை உண்டு…. “யாரும் தப்பிக்க முடியாது”…. கராறா பேசிய செந்தில் பாலாஜி….!!!!

கோயமுத்தூரில் குப்பை அள்ளும் வாகனங்கள் மற்றும் குப்பைத்தொட்டி வாங்கியதில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கோவை மாநகராட்சியில் புதிதாக தார் சாலை அமைக்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி துவங்கி வைத்தார். இதன் மொத்த மதிப்பீடு 3.18 லட்சம் ஆகும். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, கோவை மாநகராட்சியில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும் கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட இடங்கள் இன்னும் சரிப்படுத்த படவில்லை என அவர் கூறினார். மேலும் கடந்த ஆட்சியில் குப்பை அள்ளும் வாகனம், குப்பை தொட்டி மற்றும் மாநகராட்சி வாகனங்கள் வாங்குவதில் பல ஊழல்கள் மற்றும் தவறுகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் தூசி தட்டி பார்க்கப்பட்டு தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும் என அவர் கூறினார்.

Categories

Tech |