உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறும் என்று எச்சரித்துள்ளார்.
கொரோனாவின் புதிய மாறுபாடான ‘ஒமிக்ரான்’ வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா மீண்டும் உச்சத்தை கண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இன்னும் சில காலங்களுக்கு கொரோனா தொற்றானது நீடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் புதிய கொரோனா மாறுபாடு உருவாகும் என்று எச்சரித்துள்ளார்.
அதேசமயம் 2022-ஆம் ஆண்டுக்குள் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி வல்லரசு நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கி கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர உதவ வேண்டும். தடுப்பூசி மட்டுமே கொரோனாவை ஒழிப்பதற்கான ஒரே வழி. எனவே மக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.