Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வியாபாரிகள் சங்க கூட்டம்…. புதிதாக நிர்வாகிகள் தேர்வு…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

தனியார் மண்டபத்தில் வைத்து அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் 2022-ஆம் வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இவற்றில் பொருளாளராக கோகுல்ராம், செயலாளராக ராஜாராம் மற்றும் தலைவராக செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் ஒருங்கிணைப்பாளர் டைமன்ராஜா வெள்ளையன் கூறியதாவது, புகையிலைப் பொருட்கள் மூலமாக சிறு வணிகர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய புகையிலைப் பொருட்களை அரசு முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும், சில ரவுடிகளின் தூண்டுதலின் பெயரில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்படுவதை தடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |