திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் அரசு பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக டெல்லியில் அமைந்துள்ள பாரத் நகர் என்ற பகுதியில் இன்று மாலை அரசு பஸ்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.

மேலும், மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் சுக்தேவ் விஹார், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஒக்ஹ்லா விஹார், ஜசோலா விஹார் ஷஹீன் பாக் ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் இன்று மாலையிலிருந்து மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில்கள் இந்த வழியில் சென்றாலும் ரெயில்கள் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.