Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்- 5 மாவட்டங்களுக்கு கண்காணிப்பாளர் நியமனம்…!!

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக 5 மாவட்டங்களுக்கு தேர்தல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தலை நேர்மையான முறையில் நடத்தவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Image result for state election commissioner palanisamy"

அதை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்க பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திற்கு தேர்தல் கண்காணிப்பாளாராக காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து, நாகப்பட்டின மாவட்டத்திற்கு ஞானசேகரனும், நாமக்கல் மாவட்டத்திற்கு ஜெகநாதனும், ராமநாதபுர மாவட்டத்திற்கு அதுல் ஆனந்தும், நீலகிரி மாவட்டத்திற்கு ஜோதி நிர்மலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |