நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3 முதல் 15 – 18 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பள்ளிகளில் போதிய இடம் ஒதுக்க வேண்டும். பள்ளிகளில் தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைந்த ஆசிரியர் ஒருவரை தலைமை ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 2007 & அதற்கு முன் பிறந்த மாணவர்களின் விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.