Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இன்று முதல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. அதனால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மற்ற அண்டை மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக  முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டே பயணிக்க அனுமதி இல்லை என்றும், இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதி என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |