Categories
தேனி மாவட்ட செய்திகள்

வௌவ்வாலை பிடிக்க முயற்சி செய்து…. உயிரை விட்ட வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வௌவ்வாலை பிடிக்க மரத்தில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் அம்பேத்கர் காலனியில் பிரசாத் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சேகருடன் மாடு மேய்ப்பதற்காக சுருளியாறு மின் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள தனியார் இலவம் மர தோப்பிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மரத்தில் வௌவ்வால் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. இதனை பார்த்த பிரசாந்த் உடனடியாக அவரிடம் இருந்த இரும்பு பிடியை கொண்டு வவ்வலை கீழே தள்ளி விடுவதற்கு மரத்தில் ஏறியுள்ளார்.

அப்போது அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பி மீது பிரசாத் வைத்திருந்த இரும்பு கம்பி உரசியுள்ளது. இதில் அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் சேகர் உடனடியாக அவரது பெற்றோருக்கும், லோயர்கேம்ப்  காவல்துறையினருக்கும்  தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் பிரசாந்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |