மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கதிராநல்லூர் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வந்துள்ளார்.கூலி தொழிலாளியான இவர் தனது தம்பி கட்டியுள்ள புது வீட்டில் மின் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவரது பழைய வீட்டில் இருந்து மின் இணைப்பை மாட்டி கொண்டிருந்துள்ளார். அப்போது மின் இணைப்பை துண்டிக்காமல் மின் வயரை தொட்டதால் கணபதி மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கணபதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையறிந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.