மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சண்முகத்தின் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த சண்முகம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.