Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி….. ஜனவரி 31 வரை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 700க்கும் மேற்பட்டவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. அதனால் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒமைக்ரான் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கட்டுபாடுகள் விதித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி உத்தரபிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மேலும் சில மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில அரசு வருகின்ற 31ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி வைகுண்ட ஏகாதசி, இளைஞர் திருவிழா, பொங்கல் பண்டிகையை தவிர்த்து மற்ற நாட்களில் தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு பூங்கா, கடற்கரை சாலை உள்ளிட்டவைகளுக்கு இரவு 12.30 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |