Categories
தேசிய செய்திகள்

ஆர்பிஐ கேஒய்சி அப்டேட்…. மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி ஒமைக்ரான் பரவல் மத்தியில் கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கால இடைவெளி அதிகரித்து உள்ளது. அதாவது மார்ச் 31 வரை கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வங்கிகள் மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் நிதியாண்டு வரை வாடிக்கையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக மே மாதம் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் போது ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் கேஒய்சியின் அப்டேட்டை டிசம்பர் வரை நீடித்திருந்தது. அப்போது டிசம்பர் இறுதி வரை கேஒய்சி புதிய விதிமுறைகளுக்கு தவறிய வாடிக்கையாளர்களுக்கு கணக்குகளின் செயல்பாடுகளில் தண்டனை கட்டுப்பாட்டை விதிக்க வேண்டாம் என்று ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தியது.

Categories

Tech |