தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியது.பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இந்த நிலையில் மேலும் நான்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று என்று குறிப்பிட்டுள்ளது.